Sunday, 12th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு கடந்த சில நாட்களாக 300-க்கும் கீழ் குறைந்துள்ளது. இந்நிலையில் புதிய பாதிப்பு 165-ஆக சரிந்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 73 ஆயிரத்து 783 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந் து 251 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 38 ஆயிரத்து 805 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 4,345 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச் சை பெற்று வருகிறார்கள்.
இது நேற்றை விட 89 குறைவாகும். தொற்று பாதிப்பால் நேற்று டெல்லியில் ஒருவர் இறந் துள்ளார். கேரளாவில் விடுபட்ட பலிகளில் 2-யை கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,633 ஆக உயர்ந்துள்ளது. இத்தகவல்களை மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.